யானை தாக்கி இளைஞர் ஒருவர் பலி..!

யானை தாக்கி இளைஞர் ஒருவர் பலி..!

காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் அனுராதபுரம் - மதவாச்சியில் பகுதியில் இன்று (26.06.2023)அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் வயலுக்குச் சென்ற போதே யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதன்போது  27வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திலிருந்து சடலத்தை மீட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.