பனிக்கரடிகள் அழிவடையக் கூடும் என எச்சரிக்கை!

பனிக்கரடிகள் அழிவடையக் கூடும் என எச்சரிக்கை!

இந்த நூற்றாண்டின் இறுதியில் பனிக்கரடிகள் அழிவடையக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வின் நிறைவில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த தவறினால், இந்த மோசமான நிலை உருவாகுமெனவும் இதன்போது எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆர்ட்டிக் கடலிலுள்ள பனிப்பாறைகள் உருகி வருவதனால், பெரும்பாலான விலங்கினங்கள் அவற்றின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மாமிசங்களை உண்ணும் இந்தப் பனிக்கரடிகள், தமது உணவாக சீல்களை (Seals)வேட்டையாடுவதற்காக ஆர்ட்டிக் சமுத்திரத்திலுள்ள பனிப் பாறைகளையே சார்ந்திருக்கின்றன.

இந்தநிலையில் பனிப்பாறைகள் உருகி உடைந்தால், பனிக்கரடிகள் உணவிலிருந்து மிகநீண்ட தூரத்துக்கு அல்லது கரைகளுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமென விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.