
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 14 பேர் படுகாயம்!
அமெரிக்காவின் சிகாகோ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
Auburn Gresham என்ற இடத்தில் இடம்பெற்ற இறுதிச்சடங்கு நிகழ்ச்சியை முடித்து விட்டு திரும்பியவர்கள் மீது காரில் வருகை தந்திருந்த சிலரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் எதற்காக ஏன் நடைபெற்றது என்பது குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.