11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை!

11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை!

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட 11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

உய்குர் மக்களை அதிகளவில் சிறையில் அடைப்பது, அவர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது, அனுமதியின்றி அவர்களின் தனித்தகவல்களை சேகரிப்பது உள்ளிட்ட அடக்குமுறைகளை சீன அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

உய்குர் மக்களை சீனா நடத்தும்விதம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கறை எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 இந்நிலையிலேயே 11 சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்திருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.