கொழும்பில் மற்றுமொரு துப்பாக்கி சூடு..!
கொழும்பு தலவத்துகொட வெலிபாறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த நபர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை இன்று அதிகாலை மினுவாங்கொடை ஹொரம்பெல்ல பிரதேசத்தில் காவல்துறை விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.