உலக நாடுகளுக்கு சீனா செய்த கடும் துரோகம்!

உலக நாடுகளுக்கு சீனா செய்த கடும் துரோகம்!

தற்போது உலகம் முழுவதும் மனித உயிர்களை வேட்டையாடும் கொரோனா வைரஸை சீனா நினைத்திருந்தால் ஆரம்பித்திலேயே படவவிடாமல் தடுத்திருக்க முடியும் என்று மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.

சீனாவின் வுகானில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல உயிர்களை காவு கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் பலியானோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துக் கொண்டுள்ள நிலையில், சீனா மீது அமெரிக்க அதிபர் பல தடவைகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கிறார்.

இந்தநிலையில் மீண்டும் சீனா உலக நாடுகளுக்கு துரோகம் செய்துவிட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

கொரோனா பரவல் விஷயத்தில் சீனா வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை. சீனா நினைத்திருந்தால், வெளிநாடுகளுக்குப் பரவாமல் தடுத்திருக்க முடியும். ஆனால், வைரஸ் பரவுவதைத் தடுக்க கூடாது என்ற முடிவை சீனா எடுத்திருக்கிறது.

சீனாவின் வுஹான் நகரில் தான் முதலில் கொரோனா பரவியது. ஆனால், மற்ற நகரங்களுக்கு பரவ விடாமல் சீனா பார்த்துக் கொண்டது. அதேநேரத்தில் சீனாவை விட்டு உலக நாடுகளுக்கு கொரோனா பரவ விட்டு விட்டது என்று கடுமையாக பேசியிருக்கிறார்.