இன்று காலநிலையில் ஏற்பட உள்ள மாற்றம்..!

இன்று காலநிலையில் ஏற்பட உள்ள மாற்றம்..!

மேல்,சப்ரகமுவ,தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைதீவு மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், வடமேல் மாகாணத்தின் சில பகுதிகளிலும் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் கடும் மழை பொழிய கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.