கிணற்றில் தவறி வீழ்ந்து மூன்று வயது சிறுமி உயிரிழப்பு.
மல்வானே, வல்கம பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறமுள்ள குளியல் கிணற்றில் தவறி விழுந்து மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கே.பி திமாஷி ஜனித்மா மதுஷங்க என்ற மூன்று வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.

சிறுமி தனது தாயுடன் வீட்டில் இருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனடிப்படையில், பியகம மரண விசாரணை அதிகாரி டொக்டர் ஹர்ஷஜித் குணசேகரவினால் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் மரண விசாரணை நடத்தப்பட்டது.