இந்திய ரூபாயை கடத்திய பாகிஸ்தான் பிரஜை - இலங்கையில் விதிக்கப்பட்ட தண்டனை!!

இந்திய ரூபாயை கடத்திய பாகிஸ்தான் பிரஜை - இலங்கையில் விதிக்கப்பட்ட தண்டனை!!

361 இந்திய ரூபாய் 500 தாள்களை வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பிரஜை ஒருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த இன்று (02) தீர்ப்பளித்தார்.

பாகிஸ்தான் பிரஜையான மொஹமட் தாஹிர் என்ற பிரதிவாதி நேற்று நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதன்படி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 02 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்த உயர் நீதிமன்ற நீதிபதி அதனை 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கவும் தீர்மானித்தார்.மேலும், பிரதிவாதிக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

ஜூலை 15, 2013 அன்று, 361 இந்திய ரூபாய் 500 தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார், பின்னர் அவருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்தார்.