காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் மரணம்.

காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் மரணம்.

அனுராதபுரத்தில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளாதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அனுராதபுரம் - மதவாச்சி பிரதேசத்தில் நேற்று (06.08.2023) இரவு இடம்பெற்றுள்ளது.

இதன்போது 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பி.சாரங்க என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் மரணம் | Person Died After Being Attacked By Wild Elephantகுறித்த நபர் வயல் நிலத்தைப் பாதுகாக்க வயலில் தங்கச் சென்றவேளை யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.