திக்வெல்ல பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி!!
மாத்தறை - திக்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திக்வெல்ல, போதரகந்த பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டை நடத்திய பின்னர் சந்தேகநபர் மோட்டார் சைக்களில் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.