குடும்பஸ்தர் ஒருவர் வீட்டில் சடலமாக மீட்பு..!
வவுனியா - புதிய கற்பகபுரம் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று (18.08.2023) புதிய கற்பகபுரம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
40 வயது மதிக்கத்தக்க ரூபன் எனும் நபரே இவ்வாறு அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர் வாகனம் திருத்தும் தொழில் புரிபவர் என தெரியவந்துள்ளது.
குறித்த நபரின் மனைவி வெளியில் சென்று திரும்பிய வேளை தன் கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததை கண்டுள்ளார்.
இதனையடுத்து பூவரசங்குளம் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து , சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.