தொடருந்தில் மோதுண்டு 18 வயது யுவதி பலி.

தொடருந்தில் மோதுண்டு 18 வயது யுவதி பலி.

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட கொட்டகலை பிரதேசத்தில் இளம் யுவதியொருவர் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று(19.08.2023) இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள - பத்தனை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த யுவதி ஹட்டன் - குடாஓயா பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள - பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.