அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்ய நடவடிக்கை.
அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக ஐயாயிரத்து 500 பட்டதாரி ஆசிரியர்களும், இரண்டாயிரத்து 500 இரண்டாம் மொழி ஆசிரியர்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.