பண்டாரவளை பெண் கொலையில் தேடப்படும் சந்தேகநபர் இவர்தான்.
பண்டாரவளை ஹோட்டல் அறையொன்றில் பெண்ணொருவரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்ய, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சம்பவத்தின் கொலைச் சந்தேக நபரின் புகைப்படத்தை பொலிஸார், வெளியிட்டுள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பண்டாரவளை தலைமையக பொலிஸ் பரிசோதகர் (0718591523) மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு நிலைய கட்டளைத் தளபதி (0718710108, 07185994033) ஆகியோரின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பெடுத்து அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை (24) ஹோட்டல் அறையில் இருந்து எட்டம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.