வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை: சந்தேக நபரின் சகோதரருக்கு நேர்ந்த கதி!

வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை: சந்தேக நபரின் சகோதரருக்கு நேர்ந்த கதி!

வவுனியாவில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் சகோதரர் மீது தாக்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்து வவுனியா வைத்திசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம், கடந்த மாதம் 23 ஆம் திகதி வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை: சந்தேக நபரின் சகோதரருக்கு நேர்ந்த கதி! | Double Murder In Vavuniya Suspects Brother Attack

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரின் சகோதரர் மீதே நேற்று (26-08-2023) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தவசிகுளம் பகுதியில் வைத்தே குறித்த நபர் மீது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை: சந்தேக நபரின் சகோதரருக்கு நேர்ந்த கதி! | Double Murder In Vavuniya Suspects Brother Attack

இத் தாக்குதல் சம்பவத்தில் பிரதான சந்தேக நபரின் சகோதரரான 37 வயதுடைய நபர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.