பாதையை கடக்க முற்பட்டவர் வாகன விபத்தில் உயிரிழப்பு.

பாதையை கடக்க முற்பட்டவர் வாகன விபத்தில் உயிரிழப்பு.

தலவாக்கலை – நுவரெலியா வீதியில் நானுஓயா - ரதல்ல பிரதேசத்தில் பாதசாரி கடவையில் வீதியைக் கடந்தவர் லொறி மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று (28.08.2023) இடம்பெற்றுள்ளது.

ரதெல்ல, சர்செட் தோட்டத்தின் லாண்டேல் பிரிவில் வசித்து வந்த ராஜு கிருஷ்ணகுமார் என்ற 33 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

பாதையை கடக்க முற்பட்டவர் வாகன விபத்தில் உயிரிழப்பு | A Person Hit By A Truck And Killedவேலைக்குச் செல்வதற்காக அவசரமாகப் பாதசாரிக் கடவையில் கடந்த அவரை, அதிவேகமாக வந்த லொறி மோதித் தள்ளியுள்ளது.

இந்நிலையில் படுகாயமடைந்த நபர், அதே லொறியில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.