சாரதிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் - இன்று முதல் அதிரடியாக நீக்கப்படும் கட்டுப்பாடு.

சாரதிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் - இன்று முதல் அதிரடியாக நீக்கப்படும் கட்டுப்பாடு.

இலங்கையில் பெற்றோல் வழங்குவதற்காக பயன்பாட்டிலுள்ள QR நடைமுறை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை வெளியிடுவதில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR முறை இன்று (01) முதல் இரத்து செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.