மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு.

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு.

நாவலப்பிட்டி மஹகும்புரு பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (02) பிற்பகல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிதாக கட்டப்படும் தடுப்பணையின் அஸ்திவாரம் வெட்டிக்கொண்டிருந்தவரின் மீது மண் மேடு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு | One Person Was Killed In A Landslide

மண்மேடு அகற்றப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி வெரலுகஸ்ஹின்ன பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.