நிதியமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு!

நிதியமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு!

நாட்டிலுள்ள சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சலுகை வட்டி வீதத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பெரும்போகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. 

நிதியமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு! | Offer Interest Rate Loan Scheme Ministry Financeசெப்டம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து 30ஆம் திகதி வரையில் குறித்த செயற்பாடு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 25 மெட்ரிக் டன் அல்லது அதற்கும் குறைவாக நெல்லை அரைக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு இவ்வாறு கடன் தொகை வழங்கப்படவுள்ளது.