பேருந்தில் முச்சக்கரவண்டி மோதி விபத்து: ஒருவர் பலி..!

பேருந்தில் முச்சக்கரவண்டி மோதி விபத்து: ஒருவர் பலி..!

காலி - கொழும்பு பிரதான வீதியின் வாடியமன்கட சந்தியில் முச்சக்கரவண்டியொன்று பேருந்தொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை - வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய சுகத் தயானந்த சில்வா என்ற திருமணமான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த முச்சக்கரவண்டி பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கி சென்றதுடன் வேக கட்டுபாட்டை இழந்து முன்னால் பயணித்த பேருந்து மீது மோதியுள்ளது.

பேருந்தில் முச்சக்கரவண்டி மோதி விபத்து: ஒருவர் பலி | Three Wheeler Driver Who Lost His Life

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.