முடக்கநிலை காரணமாக கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள திரையரங்குகள்!

முடக்கநிலை காரணமாக கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள திரையரங்குகள்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று முடக்கநிலை, பிரித்தானிய திரையரங்குகளை சரிவின் விளிம்பிற்கு தள்ளியுள்ளதாக, கலை மற்றும் கலாச்சாரம் தொடர்பான பிரித்தானிய நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட முடக்கநிலை காரணமாக, முதல் 12 வாரங்களில் 15,000க்கும் மேற்பட்ட நாடக நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மொத்த இழப்புகளை 603 மில்லியன் பவுண்டுகள் என்று பிரித்தானிய நாடாளுமன்றக் குழு மதிப்பிட்டுள்ளது.

‘ஒரு தலைமுறையில் நமது கலாச்சார நிலப்பரப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலைக் காண்கிறோம்’ என டிஜிட்டல், கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

லண்டனின் வெஸ்ட் எண்டிலிருந்து நாடு முழுவதும் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் நகரங்கள் என சுமார் 1,100 திரையரங்குகள் பிரித்தானியாவில் உள்ளன.