சனல் 4 விவகாரம்; புலம்பெயர் தமிழர்களை இழுக்கும் நீதியமைச்சர்.
சனல் 4 புலம்பெயர்ந்த அமைப்புகளிற்கு ஆதரவானது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சனல் 4 இன் ஆவணப்படம் குறித்து நம்பிக்கையின்மை வெளியிட்டுள்ள அவர் , ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்விற் முன்னாள் புலம்பெயர்ந்த அமைப்புகள் இலங்கை குறித்து சர்ச்சைக்குரிய விடயங்களை வெளியிடுவது வழமை எனவும் நீதியமைச்சர் விஜயதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.