இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்..!
இந்த ஆண்டில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 499.2 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கிதெரிவித்துள்ளது.
மத்தியவங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் 3862.7 மில்லியன் டொலர் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த ஜனவரி மாதம் முதல் ஜுலை மாதம் வரையிலான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஓகஸ்ட் மாதம் 74.4 வீத அதிகரிப்பினை காட்டுவதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
