பயணப்பையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்; அடையாளம் காட்டிய தாய்.
சீதுவயில் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீதுவ - கிரிந்திகொட பகுதியில் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சடலம் மாரவில பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண் ஒருவருடையதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிந்திகொட தடுகங்ஓயாவை அண்டிய பகுதியில் பயணப்பையிலிருந்து இச் சடலம் நேற்று முன்தினம் மீட்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்தவரின் தாயினால் சடலம் இன்று அடையாளம் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.