ஜே.சி.பி இயந்திரம் மோதியதில் மாணவன் உயிரிழப்பு..!
மத்துகம பிரதேசத்தில் ஜே.சி.பி இயந்திரம் ஒன்று மோதியதில் மாணவர் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவன் சதுரங்க (chess)பயிற்சி முடிந்து பாடசாலைக்கு அருகில் உள்ள மைதானத்திற்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்துகம ஆனந்த சாஸ்த்ரால கல்லூரியில் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் ஜேசிபி இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மத்துகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது...