
சரமாரியாக நடத்தப்பட்ட வான் வெளித் தாக்குதல்கள்! 45 பொது மக்கள் பலி
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 45 பேர் பலியாகினர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள கம் சியாராத் பகுதியில் தலிபான்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 45 பேர் பலியாகினர். தலிபான்களும் இந்தத் தாக்குதலில் பலியாகினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.