யாழில் கடமையில் இருந்தவரை கட்டிப்போட்டுவிட்டு திருட்டு!

யாழில் கடமையில் இருந்தவரை கட்டிப்போட்டுவிட்டு திருட்டு!

கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டு விட்டு யாழ்ப்பாணம், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்புகளை திருடிய இளைஞர் ஒருவரை நேற்றிரவு வெள்ளிக்கிழமை (06) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில் , சம்பவம் தொடர்பிலான விசாரணைளை காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்திருந்தனர்.

யாழில் கடமையில் இருந்தவரை கட்டிப்போட்டுவிட்டு திருட்டு! | Was On Duty In Yali Was Tied Up And Stolenஇதன்போது காங்கேசன்துறை நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

 மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.