யாழில் மதுபோதையில் மருமகனின் வெறிச்செயல்.

யாழில் மதுபோதையில் மருமகனின் வெறிச்செயல்.

யாழ் பிரதேசசபையால் வழங்கப்பட்ட மலசலகூடத்தை மது போதையில் வந்தவர் அடித்து நொருக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் தவசிகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழில் மதுபோதையில் மருமகனின் வெறிச்செயல் | Son In Law S Act Of Drunkenness In Jaffna

பிரதேச சபை உறுப்பினரின் முயற்சியால் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட மலசலகூடம் அந்தக் குடும்பத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதே வீட்டில் வசிக்கும் மருமகன் மதுபோதையில் வந்து அலவாங்கால் மலசலகூடத்தை உடைத்துச் சேதமாக்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.