யாழில் புகையிரதத்தில் ஏற முற்பட்ட போது நபரொருவருக்கு நேர்ந்த சோகம்!

யாழில் புகையிரதத்தில் ஏற முற்பட்ட போது நபரொருவருக்கு நேர்ந்த சோகம்!

யாழில் - புகையிரத்தில் ஏற முற்பட்ட போது தவறி தண்டவாளத்தில் விழுந்து காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ் - சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த மாணிக்கம் விஜயரட்ணம் (வயது-69) என்பவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தச்சன்தோப்பு புகையிரத நிலையத்தில் இருந்து கடந்த (08.10.2023) புகையிரதத்தில் ஏறிய போது தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.

யாழில் புகையிரதத்தில் ஏற முற்பட்ட போது நபரொருவருக்கு நேர்ந்த சோகம்! | The Person Who Went To Board The Train Died

விபத்துக்குள்ளான நபர்  உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (12.10.2023) பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணம் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.