யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் படுகாயம்.

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் படுகாயம்.

துன்னாலை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் படுகாயம் | Youth Seriously Injured Incident In Jaffnaதுன்னாலை கிழக்குப் பகுதியில் நேற்று (13) பிற்பகல் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை சுஜீதரன் (வயது-31) என்ற இளைஞரே வாள் வெட்டு காயங்களிற்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.