காதல் விவகாரத்தில் நேர்ந்த பரிதாபம் : கத்தியால் குத்தி இளம் யுவதி படுகொலை..!

காதல் விவகாரத்தில் நேர்ந்த பரிதாபம் : கத்தியால் குத்தி இளம் யுவதி படுகொலை..!

காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மோதலில் இளம் யுவதி ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கொழும்பு - கடுவெல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

அப்பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஆர்.டபிள்யூ. அனுதர்ஷினி என்ற யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

காதல் விவகாரத்தில் நேர்ந்த பரிதாபம் : கத்தியால் குத்தி இளம் யுவதி படுகொலை | Young Woman Murder

யுவதியின் வீட்டில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யுவதியின் முன்னாள் காதலனைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.