யாழில் அதிர்ச்சி சம்பவம்: இரவு நித்திரைக்கு சென்ற நபரொருவர் காலையில் சடலமாக மீட்பு!

யாழில் அதிர்ச்சி சம்பவம்: இரவு நித்திரைக்கு சென்ற நபரொருவர் காலையில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை ஆதி கோவிலடி பகுதியில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்றைய தினம் (15-10-2023) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் அதிர்ச்சி சம்பவம்: இரவு நித்திரைக்கு சென்ற நபரொருவர் காலையில் சடலமாக மீட்பு! | Person Sleep Nit Dead Body Recovery Morning Jaffna

குறித்த சம்பவத்தில் ஆதி கோவிலடி பகுதியைச் சேர்ந்த 63 வயதான இராமநாதன் தங்கநாதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டில் இரவு படுக்கையில் இருந்தவரை காலையில் காணாத நிலையில் தேடிய போது வீட்டின் பின்புறம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார்.

யாழில் அதிர்ச்சி சம்பவம்: இரவு நித்திரைக்கு சென்ற நபரொருவர் காலையில் சடலமாக மீட்பு! | Person Sleep Nit Dead Body Recovery Morning Jaffnaஇச் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணை மேற்கொண்டார்.

இதேவேளை, சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரதே பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.