
யாழில் மீட்கப்பட்ட அதி உயர் சக்தி வாய்ந்த வெடிமருந்துகள்..!
யாழ் குருநகர் பகுதியில் 01 கிலோவுக்கும் அதிகமான TNT உயர் வெடிமருந்துகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையினரால் இன்று (17) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையி்ன் போதே அதிசக்தி வாய்ந்த இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் உள்ள ஜெட்டிக்கு அருகில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிமருந்துகளை சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக மறைத்து வைத்துள்ளதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில், வெடிபொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சமர்ப்பிக்கப்படும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது.