வெளிநாடு அனுப்புவதாக 80 இலட்சம் ரூபாய் மோசடி; சிக்கிய யாழ் நபர்!

வெளிநாடு அனுப்புவதாக 80 இலட்சம் ரூபாய் மோசடி; சிக்கிய யாழ் நபர்!

வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி இளைஞர் ஒருவரிடம் 80 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ்பாணத்தைச் சேர்ந்த நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே நேற்றைய தினம்(16) கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடு அனுப்புவதாக 80 இலட்சம் ரூபாய் மோசடி; சிக்கிய யாழ் நபர்! | Jaffna Person Involved In Fraud Of 80 Lakh Rupeesஅம்பாறை பகுதியைச் சேர்ந்த இளைஞரிடம் இருந்தே சந்தேக நபர் 80 இலட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டினையடுத்து, குறித்த நபரைக் கைது செய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.