சுவிஸ்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் 34 ஆயிரம் பேர் பாதிப்பு!

சுவிஸ்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் 34 ஆயிரம் பேர் பாதிப்பு!

சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், 34 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் பெருந்தொற்றினால் 117பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 3பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால், அதிக பாதிப்பை எதிர்கொண்ட 52ஆவது நாடாக விளங்கும் சுவிஸ்லாந்தில், இதுவரை ஆயிரத்து 975பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 525பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 25பேரின் நிலை மிக மோசமாக உள்ளது.

மேலும், 30ஆயிரத்து 500பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.