யாழ்ப்பாணத்தில் பெரும் துயரம்: மயங்கி சரிந்த 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பெரும் துயரம்: மயங்கி சரிந்த 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

தலையில் விறைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த சிறுமியொருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தண்ணீர் தாங்கி வீதி, குருநகரை சேர்ந்த 10 வயதான ஜேசுதாஸ் அனோஜினி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பெரும் துயரம்: மயங்கி சரிந்த 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு! | 10 Year Old Child Fainted And Collapsed In Jaffnaசென் ஜேம்ஸ் மகளிர் கல்லூரியில் 5ம் ஆண்டில் கல்வி பயிலும் குறித்த சிறுமி வீட்டிலிருந்த போது கடந்த 21ம் திகதி காலை 5 மணியளவில் தலையில் விறைப்பு ஏற்பட்டதையடுத்து மயங்கியுள்ளார்.

இதையடுத்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (29-10-2023) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

குறித்த உயிரிழப்பு தொடர்பில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

இதையடுத்து பிரேதத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த்திய பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.