பட்டதாரிகளுக்கும் வெகு விரைவில் வெளியாகவுள்ள மகிழ்ச்சி தகவல்!

பட்டதாரிகளுக்கும் வெகு விரைவில் வெளியாகவுள்ள மகிழ்ச்சி தகவல்!

இலங்கையில் பெருந்தோட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்வதற்காக 2,840 பேருக்கு புதிதாக நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகளுக்கும் வெகு விரைவில் வெளியாகவுள்ள மகிழ்ச்சி தகவல்! | Appointment For Graduates Also Soon Sri Lanka

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வெகு விரைவில் வழங்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டார்.