தனிமையில் தவிக்கும் ரச்சிதா; பிக்பாஸில் கணவன் - இந்த நிலைமையில் வெளியிட்ட வீடியோ!

தனிமையில் தவிக்கும் ரச்சிதா; பிக்பாஸில் கணவன் - இந்த நிலைமையில் வெளியிட்ட வீடியோ!

தனிமை குறித்து நடிகை ரச்சிதா வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலெட்சுமி. அதே தொடரில் நடித்த தினேஷை காதலித்து 2013ல் திருமணம் செய்துக்கொண்டார்.

actress rachithaசமீபத்தில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனி தனியே வாழ்ந்து வந்தனர். அதன்பின், ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். தொடர்ந்து, அவ்வபோது ஃபோட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்த வண்ணம் உள்ளார்.

அண்மையில் அவரது தந்தை காலமானார். இதனால் ரச்சிதா மன வேதனயில் உள்ளார். தற்போது, கணவர் தினேஷ் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்துள்ளார்.

இந்நிலையில், தனிமை தான் அவளிடம் அடிமை ஆகிவிட்டது என்று கூறி சோகத்துடன் எடுத்த வீடியோ ஷூட்டினை பகிர்ந்துள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து கமெண்டை குவித்த வண்னம் உள்ளனர்.