தீபாவளி அன்று இடம்பெற்ற பயங்கர சம்பவம்: ஒருவர் உயிரிழப்பு!

தீபாவளி அன்று இடம்பெற்ற பயங்கர சம்பவம்: ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் கெற்பேலி - கச்சாய் வீதியில் நேற்றைய தினம் (13-11-2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதியில் தீபாவளி அன்று இடம்பெற்ற பயங்கர சம்பவம்: ஒருவர் உயிரிழப்பு! | Jaffna Kodikamam Motor Cycle Accident Person Died

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டினை இழந்து மதகுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற உசன் மிருசுவில் பகுதியைச் சேர்ந்த 56 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.