யாழில் தரையிறங்காது திரும்பிச்சென்ற விமானம்!

யாழில் தரையிறங்காது திரும்பிச்சென்ற விமானம்!

மோசமான வானிலையால் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்காது, மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பி சென்றுள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்ட விமானமே, இவ்வாறு யாழில் தரையிறங்காது மீள சென்னைக்கு திரும்பி இருந்தது.

யாழில் தரையிறங்காது திரும்பிச்சென்ற விமானம்! | The Plane Returned Without Landing In Yaliகுறித்த விமானத்தில் 24 பயணிகள் பயணித்ததாகவும், அவர்களுக்கான மாற்று பயணச்சீட்டுகள் வழங்கி மாற்று பயண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.