யாழில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு நேர்ந்த கதி!

யாழில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு நேர்ந்த கதி!

யாழ் - சுன்னாகம் பிரிவிற்குற்பட்ட மல்லாகம் பிரதேசத்தில் குளிர்பான நிலையத்தில் பணிபுரியும் பெண்ணுடன் பாலியல் தொந்தரவு கொடுத்த  நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மல்லாகம் பிரதேசத்தில் குளிர்பான நிலையம் நடாத்தி வரும் 45 வயது நபர், குளிர்பான நிலையத்தில் கடமையாற்றும் 19 வயது யுவதியுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதுடன், பாலியல் வீடியோக்களை தொலைபேசி மூலமாக அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

யாழில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு நேர்ந்த கதி! | Man Gave Sexual Harassment In Jaffna Was Arrestedஇந்நிலையில் சந்தேகநபர் நேற்றையதினம் (15.11.2023) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் (23.11.2023) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.