யாழில் முதியவர் அடித்து கொலை!!

யாழில் முதியவர் அடித்து கொலை!!

யாழ்ப்பாணம் - உரும்பிராய் தெற்கு பகுதியில் முதியவரொருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(18.11.2023) இரவு இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்கு இலக்காகிய முதியவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

உணவகம் ஒன்றில் பணியாற்றும் உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த சுப்பிரமணியம் பிறேமராசன் என்ற 66 வயதான முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உணவகம் ஒன்றில் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கான காரணம் என தெரியவரும் நிலையில் அதே பகுதியை வாய் பேச இயலாத சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் முதியவர் அடித்து கொலை | Old Man Beaten To Death In Jaffna

கொலை நடந்த இடத்தில் யாழ். நீதவான் ஏ.ஆனந்தராஜா இன்று (19)பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் முதியவர் அடித்து கொலை | Old Man Beaten To Death In Jaffna