
யாழில் மாணவனை தாக்கிய ஆசிரியருக்கு பிணை..!
யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் உள்ள பாடசாலையில் மாணவனை தாக்கிய சம்பவத்தில் கைதாகிய ஆசிரியர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை செய்த நீதிமன்றம் நேற்றையதினம்(18.11.2023) குறித்த ஆசிரியரை பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவரொருவர் பாடசாலைக்கு வராத நிலையில் நேற்று முன்தினம் ஆசிரியரால் தாக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மாணவன் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஆசிரியர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.