யாழில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகும் மர்ம நபர் : மடக்கிப்பிடித்த காவல்துறை.

யாழில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகும் மர்ம நபர் : மடக்கிப்பிடித்த காவல்துறை.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அருகிலுள்ள நீராவியடிப் பகுதியில் இரவு நேரங்களில் வீட்டு உரிமையாளருக்கு தெரியாமல் வீட்டிற்குள் புகுந்து குளியல் அறையில் கமரா மூலம் காணொளிகளை எடுத்து மிரட்டும் மர்ம நபரொருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,  குறித்த நபருக்கு எதிராக சில பெண்கள் சிறுவர் பெண்கள் காவல்துறை பிரிவில் முறைப்பாட்டை பதிவு செய்ததன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

யாழில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகும் மர்ம நபர் : மடக்கிப்பிடித்த காவல்துறை | Man Arrested For Roaming At Night In Jaffnaஅதற்கமையவே அச்சந்தேக நபரை கண்காணிப்பு கமரா உதவியுடன் கைது செய்த யாழ் பிராந்திய காவல்துறை புலனாய்வுப் பிரிவினர், யாழ்ப்பாண காவல் நிலையத்தில் சிறுவர் பெண்கள் பிரிவில் பாரப்படுத்தினர்.

பின் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் முற்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.