யாழ்ப்பாணத்தில்உணவகத்திற்கு வைக்கப்பட்டது ‘சீல்’.

யாழ்ப்பாணத்தில்உணவகத்திற்கு வைக்கப்பட்டது ‘சீல்’.

கடந்த திங்கட்கிழமை யாழ் மாநகரசபையின் நல்லூர் பிரிவு பொது சுகாதார பரிசோதகர் பு. ஆறுமுகதாசன் தலைமையிலான குழுவினரால் கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள உணவகம் திடீர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது பல சுகாதார குறைபாடுகள் இனங் காணப்பட்டது. ஏற்கனவே பல தடவைகள் அறிவுறுத்தப்பட்ட நிலையிலும் தொடர்ந்து சுகாதார சீர்கேட்டுடனேயே குறித்த உணவகம் இயங்கி வந்தமை அவதானிக்கப்பட்டது.

அத்துடன்உணவகத்தில் திகதி காலாவதியான உணவு பொருட்களும் பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து உணவக உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் இன்று புதன்கிழமை பொது சுகாதார பரிசோதகர் பு. ஆறுமுகதாசன் சுகாதார சீர்கேடு, காலாவதியான உணவு பொருட்கள் வைத்திருந்தமை என்பவற்றிற்கு தனித்தனியே வழக்குகள் தாக்கல் செய்தார்.

யாழ்ப்பாணத்தில்உணவகத்திற்கு வைக்கப்பட்டது ‘சீல்’ | Seal Placed On Restaurant In Jaffnaவழக்கினை விசாரித்த நீதவான் குறைபாடுகள் நிவர்த்தி செய்யும்வரை உணவகத்தினை சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு கட்டளை வழங்கினார். இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பு. ஆறுமுகதாசனினால் உணவகம் சீல் வைத்து மூடப்பட்டது.

யாழ்ப்பாணத்தில்உணவகத்திற்கு வைக்கப்பட்டது ‘சீல்’ | Seal Placed On Restaurant In Jaffna