
யாழ் நகரில் கைதான 23 வயது இளைஞன்!
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் இளைஞரொருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோ 480 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோ 480 கிராம் கேரள கஞ்சாவுடன் இளைஞரொருவர் நேற்று விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த சந்தேக நபரையும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதியையும் மேலதிக விசாரணைகளுக்காக விசேட அதிரடிப் படையினர் யாழ்ப்பாணம் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.