
கொவிட்-19: அமெரிக்காவில் நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவானது!
அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அமெரிக்காவில், 78ஆயிரத்து 9பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 141பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல்நாடாக விளங்கும் அமெரிக்காவில், இதுவரை 42இலட்சத்து 48ஆயிரத்து 327பேர் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன் ஒரு இலட்சத்து 48ஆயிரத்து 490பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 20இலட்சத்து 71ஆயிரத்து 763பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 19 ஆயிரத்து 98பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
இதுதவிர இதுவரை 20இலட்சத்து 28ஆயிரத்து 74பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.