இங்கிலாந்தில் உள்ளரங்க உடற்பயிற்சி கூடங்கள்- நீச்சல் குளங்கள் மீண்டும் திறப்பு!

இங்கிலாந்தில் உள்ளரங்க உடற்பயிற்சி கூடங்கள்- நீச்சல் குளங்கள் மீண்டும் திறப்பு!

இங்கிலாந்தில் உள்ளரங்க உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் விளையாட்டு வசதிகள் மீண்டும் திறக்கத் தொடங்கியுள்ளன.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் முடக்கநிலையின் சமீபத்திய தளர்த்தலின் கீழ் இது வருகின்றது.

உடற்பயிற்சி கூடங்கள் கடுமையான சுகாதாரம் மற்றும் சமூக தொலைதூர நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது.

அதாவது உடற்பயிற்சி செய்யும் நபர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உபகரணங்களை இடைவெளியில் வைப்பது அடங்கும்.

இந்த மாத தொடக்கத்தில் வழங்கப்பட்ட அரசாங்க வழிகாட்டுதலின் படி, உடற்பயிற்சி செய்யும் நபர்களின் அளவைக் குறைத்து போதுமான காற்றோட்டத்தை உறுதி செய்ய வேண்டும்.

ஒரு வழி நுழைவு மற்றும் வெளியேறும் முறையை செயற்படுத்துவது உள்ளிட்ட உட்புற குளங்களை எவ்வாறு மீண்டும் திறப்பது என்பது குறித்து இங்கிலாந்து நீச்சல் துறை வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

வடக்கு அயர்லாந்தில் உள்ளரங்க உடற்;பயிற்சி கூடங்கள் இந்த மாத தொடக்கத்தில் திறக்கப்பட்டன. ஆனால் அவை ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸில் மூடப்பட்டுள்ளன.

இதற்கிடையில், சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் உடற்பயிற்சி கூடங்களை திறக்க உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் Luton அல்லது Blackburnஇல் Darwenஉடன் விளையாட்டு வசதிகள் மீண்டும் திறக்கப்படாது. ஏனெனில் அந்த பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளன.

ஜூலை 4ஆம் திகதி முதல் இங்கிலாந்தில் வெளிப்புற உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் குளங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அங்கு காற்றில் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து குறைவாக உள்ளது.