உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை

உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிர நிலையை எட்டியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெனிவாவில் இடம்பெற்ற விசேட செய்தியாளர்கள் சந்திப்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் Tedros Adhanom Ghebreyesus இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச ரீதியில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 மில்லியனை அண்மித்துள்ளதுடன் இதுவரை 6 இலட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

இந்த நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் மற்றும் George town பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக  சட்டரீதியான தரவுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது .

குறித்த தரவுக்கட்டமைப்பு மூலம் உலக நாடுகளில் அமுல்படுத்தப்படும் சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்கானிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இருப்பினும் ஒழுங்கற்ற விதத்தில் வடிவமைக்கப்பட்டு, அமல்படுத்தப்படுகிற சட்டங்கள் கொரோனா வைரஸ் தொற்று பரவலை அதிகரிக்கின்றதாக Tedros Adhanom தெரிவித்துள்ளார்